NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அரசாங்கத்தால் வரிச்சுமையை குறைக்க முடியாமல் போயுள்ளது – சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் புதிய அரசாங்கம் கலந்துரையாடிய போதும், மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள நேரடி மற்றும் மறைமுக வரிகளை குறைக்க அரசாங்கத்தினால் முடியாது போயுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அவிசாவளை தேர்தல் தொகுதி கட்சி செயற்பாட்டாளர்களுடனான இடம்பெற்ற சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அதன்படி, விதிக்கப்பட்ட வரிகள் அவ்வாறே அறவிடப்படுகின்றதாகவும், தற்போதைய அரசும் சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டை அவ்வாறே தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் மறந்துவிட்டது எனவும், ஜனாதிபதியும் அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்திய கலந்துரையாடல் என்ன? என்பதை அறிய விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

நேரடி மற்றும் மறைமுக வரிகளை குறைக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பதையும் அறிய விரும்புவதுடன், தற்போதைய அரசாங்கம் தேர்தல் காலத்தில் வரிகளை குறைப்பதாக கூறுகின்ற போதிலும் அதனை நிறைவேற்றப்போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி வரிச்சுமையை குறைப்பதாகவும், தற்போதுள்ள நிலையில் வாழ்க்கைச் செலவு சுமைக்கு ஈடுகொடுக்க முடியாது என்பதால் மக்கள் இந்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த அழுத்தத்தின் அசௌகரியத்தை குறைக்கும் வேலைத்திட்டத்திற்கு செல்லுமாறு தான் எதிர்க்கட்சியில் இருந்த போதே சர்வதேச நாணய நிதியத்துக்கு முன்மொழிதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் மக்களை ஒடுக்கும் வரிச்சுமையை நீக்கி நிவாரணம் வழங்குவோம் எனவும் அவர் மேலும் உறுதியளித்துள்ளார். அரசாங்கத்தால் வரிச்சுமையை குறைக்க முடியாமல் போயுள்ளது – சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு!

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles