NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு!

அநுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய, இஹல கங்ஹிடிகம வாவியில்  நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி நேற்று உயிரிழந்துள்ளனர்.

பொல்கஹவெல மற்றும் பூஜாபிட்டிய பகுதிகளைச்  சேர்ந்த 24 மற்றும் 34 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவரும் மேலும் இருவருடன் மது அருந்திவிட்டு போதையில்  நீராடச் சென்ற நிலையில் நீரில் மூழ்கியுள்ளதாக  தெரியவந்தள்ளது.

 உயிரிழந்த இருவரின் சடலங்கள்   கஹட்டகஸ்திகிலிய வைத்தியசாலையின் பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை  கஹட்டகஸ்திகிலிய பொலிஸார்   மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles