NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முன்பள்ளி ஆசிரியை கழுத்து அறுத்து படுகொலை – பேராதனையில் சம்பவம்

கண்டி – பேராதனை, இலுக்வத்த பிரதேசத்தில் முன்பள்ளி ஆசிரியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இக்கொலைச்சம்பவம் இன்று (07) காலை இடம்பெற்றுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.

முருதலா பகுதியைச் சேர்ந்த 25 யுவதியே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

முன்பள்ளியில் நடைபெறவிருந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த வேளையில், கினிஹேன மயானத்திற்கு அருகில் அவரது கழுத்தை அறுத்துள்ளமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles