NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று!

எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ள எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று இடம்பெறவுள்ளது.

இன்று தபால் மூலம் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி தபால மூலம் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், அங்கீகரிக்கப்பட்ட 10 அரசியல் கட்சிகளும் 2 சுயேட்சைக் குழுக்களும் எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தன.

எனினும், அங்கீகரிக்கப்பட்ட 8 அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சைக் குழுவும் தங்களது வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளன.

எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல்களுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கடந்த 12 ஆம் திகதி தபால் நிலையங்களில் கையளிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, அவை எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles