NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொழும்பு பாடசாலை ஒன்றின் சுவர் இடிந்து மாணவர்கள் மூவர் காயம்

கொழும்பு, பொரளையில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் பாதுகாப்புச் சுவர் இடிந்து வீழ்ந்ததில் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான மண் தள்ளும் இயந்திரம் ஒன்று குறித்த பாடசாலையின் பாதுகாப்புச் சுவருடன் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இயந்திரம் சுவரில் மோதிய வேகத்தில் சுவர் சரிந்து விழுந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது

இவ்விபத்தில் காயமடைந்த 16 வயதுடைய மூன்று மாணவர்களும் உடனடியாக மீட்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் ஒரு மாணவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதோடு, அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பில் 48 வயதுடைய டோசர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share:

Related Articles