NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கம்மன்பில வழங்கி கால அவகாசம் இன்றுடன் நிறைவு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளியிடப்படாமல் இருந்த இரண்டு அறிக்கைகளை வெளியிடுவதற்கு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, குறித்த அறிக்கைகளை பகிரங்கப்படுத்துவதன் மூலம், அரசியலமைப்பில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை நிறைவேற்றி, அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்படும் அபாயத்தைத் தவிர்க்க இன்று காலை 10 மணி வரை காலவகாசம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி அரசியலமைப்பின் 38 ஆவது சரத்தை மீறி, குறித்த காலப்பகுதிக்குள் இந்த அறிக்கையை வழங்கத் தவறினால், தான் நிச்சயமாக அந்த அறிக்கைகளை முன்வைப்பேன் எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles