NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கை அணி !

ஹங்கேரியின் ‘புடாபேஸ்ட்’ நகரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஆண்களுக்கான 4×400 மீட்டர் அஞ்சலோட்டப் போட்டிக்கு இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது.

இதன்மூலம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை அஞ்சலோட்ட அணி உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெற்ற பதிவை நிலைநாட்டியுள்ளது.

இலங்கை 4×400 மீட்டர் அஞ்சலோட்ட அணி தாய்லாந்தில் அண்மையில் நடைபெற்ற 25ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷப்பில் பங்குகொண்டு 3 நிமிடங்கள் 01.56 செக்கன்களில் போட்டித் தூரத்தை நிறைவு செய்து தங்கப் பதக்கத்தை வென்றது. இதன்மூலம் இலங்கை அஞ்சலோட்ட அணிக்கு உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பிற்கான அணிகள் தரப்பத்தலில் 12ஆவது இடத்தை பிடிக்க முடிந்தது.

உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஆண்களுக்கான 4×400 மீட்டர் அஞ்சலோட்டப் போட்டிக்கு முதல் 16 இடங்களில் உள்ள அணிகளே தகுதி பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles