NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாசாவில் ஏற்பட்ட மின்தடையால் தொடர்பு துண்டிப்பு !

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் நேற்று திடீரென மின்தடை ஏற்பட்டுள்ளது.


இதன்காரணமாக விண்வெளி மையம், விண்வெளி வீரர்கள் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் Back-up Control System மூலம் விண்வெளி மையத்துடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர்.


மின்தடையால் சுமார் 90 நிமிடங்கள் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதோடு நாசாவில் ஏற்பட்ட தடை குறித்து ரஷ்யாவின் தகவல் தொடர்பு அமைப்பு மூலமாக 20 நிமிடத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது.

விண்வெளி வீரர்கள் மற்றும் விண்வெளி மையத்துடன் தொடர்பு கொள்ள நாசாவில் தனியாக கட்டுப்பாட்டு மையம் உள்ளது. ஒருவேளை இந்த மையம் வேலை செய்யவில்லை என்றால், இதற்கு மாற்று திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.


முதன்முறையாக விண்வெளி மையத்தை தொடர்பு கொள்ள நாசா இந்த மாற்று ஏற்பாட்டை பயன்படுத்தியுள்ளதாக சர்வதேவச செய்திகள் தெரிவித்துள்ளன.

இதுறித்து விண்வெளி நிலைய திட்ட மேலாளர் ஜோல் கூறுகையில், ‘விண்வெளி வீரர்களுக்கோ, நிலையத்திற்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை‘ எனத் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles