NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அரிசி இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிக் காலம் நாளையுடன் நிறைவு!

இறக்குமதியாளர்களுக்கு அரிசி இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிக் காலம் நாளை (10) நள்ளிரவுடன் முடிவடைவதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

அரிசி பற்றாக்குறைக்குத் தீர்வாக, கடந்த 4 ஆம் திகதி முதல் தனியார் துறைக்கு அரிசி இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியது, அதன்படி, நேற்றைய நிலவரப்படி சுமார் 115,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதியாளர்கள் இறக்குமதி செய்துள்ளதாக சுங்கத் துறை தெரிவித்துள்ளது.

அரிசி இறக்குமதி செய்வதற்கான காலக்கெடு நாளை முடிவடைவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, அரிசி இறக்குமதியை நிறுத்திவிட்டதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles