NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உயிரை மாய்த்துக்கொண்ட 17 வயது யுவதி…!

யாழ்ப்பாணம் – அராலி பகுதியை சேர்ந்த 17 வயது யுவதி ஒருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் குறைந்த பெறுபேற்றை பெற்றமைக்காக குறித்த யுவதியை பெற்றோர் கண்டித்துள்ள நிலையில் அவர் இவ்வாறு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

உயிரிழந்த யுவதியின் மரண விசாரணைகளை திடீர் மரணம் விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

அத்துடன், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் யுவதியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles