NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை நீர்வெட்டு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கொழும்பின் பல இடங்களில் நாளை (15), 14 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அதன்படி, நாளை காலை 8 மணி முதல் இரவு 10 வரை இந்த நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 01 முதல் 04 வரைக்கும், கொழும்பு 07 முதல் 15 வரையான பகுதிகளுக்கே இந்த நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

மாளிகாகந்த மற்றும் எலிஹவுஸ் நீர் வளாகங்களுக்கு நீரை விநியோகிக்கும் குழாயில் மேற்கொள்ளப்பட்ட திருத்தப்பணிகள் காரணமாகவே நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படுவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles