NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொழும்பிலிருந்து அதிக பயணிகளுடன் சென்ற புகையிரதம் மீது கல்வீச்சு தாக்குதல்..!

கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பயணித்த புகையிரதத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தெமட்டகொடை பகுதியில் வைத்து நேற்று மாலை 6.40 மணியளவில் இந்த கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

அதிக பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்த புகையிரதத்தின் மீது கல் வீசி தாக்கியதில் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அதன்போது சில பயணிகள் கண்ணாடி துண்டுகளால் தாக்கப்பட்டுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த தாக்குதலை பொருட்படுத்தாமல் புகையிரதம் தொடர்ந்தும் பயணித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Share:

Related Articles