NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

செப்டம்பர் 15 ஒலிபெருக்கி மூலம் நடத்தப்படும் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கோரிக்கை

எதிர்வரும் செப்டம்பர் 15 ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளதால் அன்று காலை 9.30 மணி முதல் மதியம் 12.15 மணி வரை கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஒலிபெருக்கி மூலம் நடத்தப்படும் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித ஜயசுந்தர இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

அத்தோடு, இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் 2849 பரீட்சை நிலையங்களில் எதிர்வரும் 15ஆம் திகதி காலை நடைபெறவுள்ளதுடன், 3,23,879 பரீட்சார்த்திகள் பரீட்சையில் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles