NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்..!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கொழும்பில் இன்று (04) சந்தித்துள்ளார்.

இதன்போது, புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி அநுர குமாரவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் வாழ்த்துச் செய்திகளையும் தெரிவித்தார்.

மேலும், இரு நாடுகள் மற்றும் பிராந்திய மக்களின் நலனுக்காக, முன்னெடுத்துவரும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதோடு, இந்தியா-இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles