NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தனியார் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட முதற்கட்ட அரிசி தொகை சந்தைக்கு விநியோகம்!

தனியார் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நேற்று இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் முதலாவது தொகை சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அரிசி தொகையை, இறக்குமதியாளர்கள் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்ததுடன், அதற்கமைய, நேற்று 75,000 கிலோ அரிசி சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இன்றும், நாளையும் கூடுதலான அரிசி தொகை நாட்டை வந்தடைய உள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சதொச நிறுவனத்தின் தலைவர் கலாநிதி சமித்த பெரேரா, இறக்குமதி செய்யப்பட்ட அரிசி சந்தைக்கு வருவதன் மூலம் நாட்டில் நிலவும் அரிசித் தட்டுப்பாடு தீர்க்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles