NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தொற்று நோய்கள் குறித்து எச்சரிக்கை!

வெள்ள நீர் வடிந்து செல்வதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வயிற்றுப்போக்கு, எலிக்காய்ச்சல் மற்றும் தொற்று நோய்களின் அறிகுறிகள் காணப்பட்டால், கூடிய விரைவில் மருத்துவ சிகிச்சை பெறுமாறு சங்கத்தின் உறுப்பினர் சந்துன் ரத்நாயக்க அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, கடும் மழை காரணமாக 40 ஆயிரத்து 758 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 59 ஆயிரத்து 511 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அனர்த்த நிலைமை காரணமாக இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.

இரண்டாயிரத்து 433 குடும்பங்களைச் சேர்ந்த பத்தாயிரத்து 361 பேர் 80 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles