NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பல புகையிரத சேவைகள் இரத்து..!

நாட்டின் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கவிருந்த அதன்படி, இன்று (27) இரவு கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிச் செல்லவிருந்த இரவு தபால் புகையிரத சேவையையும் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கவிருந்த தபால் புகையிரத சேவையையும் இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மட்டக்களப்பு புகையிரத மார்க்கத்தில் இயங்கும் புகையிரத சேவைகள் பொலன்னறுவை புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், மலையக புகையிரத சேவைகள் இன்று பிற்பகல் நானுஓயா புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

Share:

Related Articles