NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து…!

ஹங்குரன்கெத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்தோட்டை – லூல்கந்துர பகுதியில் நேற்று (07) பிற்பகல் மாலை பேருந்து ஒன்று பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஆடைத்தொழிற்சாலை ஒன்றின் பணியாளர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேரிந்து ஹகுரன்கெத்தவிலிருந்து தெல்தோட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் பேருந்தின் சாரதி மற்றும் இரண்டு பெண் பணியாளர்களும் காயமடைந்து தெல்தோட்டை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Share:

Related Articles