(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
கரையோரப் புகையிரதத்தின் பேருவளை மற்றும் அளுத்கம நிலையங்களுக்கு இடையிலான மஸ்ஸல வீதி புகையிரதக் கடவை புதிய நிர்மாணப் பணிகள் காரணமாக நாளை (08) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இப்புகையிரத பாதை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், இந்த பாதையை மூடும் போது மாற்று வழிகளை பயன்படுத்துமாறு புகையிரத திணைக்களம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.





