NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

போதைப்பொருளுடன் இருவர் கைது..!

கல்கிஸ்ஸ புகையிரத நிலையத்திற்கு அருகாமையிலும், இரத்மலானை பகுதியிலும் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸ்ஸ பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேகநபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான நபரிடமிருந்து 10.200 மில்லிகிராம் மற்றும் 6.500 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் 22, 42 வயதுடைய இரத்மலானை பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share:

Related Articles