NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மட்டு.நகரில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதுடன் 442 வாக்களிப்பு நிலையங்கள் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் ஜனாதிபதி தேர்தலுக்கான மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான து.து.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று வரையில் 46 தேர்தல் சட்ட விதிமுறை மீறல்கள் மட்டுமே முறைப்பாடுகளாக பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் எந்த தேர்தல் வன்முறைகளும் பதிவுசெய்யப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share:

Related Articles