NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மருந்து ஒழுங்குப்படுத்தல் சட்டம் – மருத்துவ சபைச் சட்டம் என்பன முற்றாக நீக்கப்படும்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

தேசிய மருந்து ஒழுங்குப்படுத்தல் அதிகார சபைச் சட்டம் மற்றும் இலங்கை மருத்துவ சபைச் சட்டம் என்பன முற்றாக நீக்கப்படுமென சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சுகாதார துறையில், மிகவும் திறந்த மற்றும் நியாயமான சந்தையை அனுமதிக்கும் வகையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

விஞ்ஞானப் பாடம் மாத்திரமன்றி அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் கல்வி கற்ற மாணவர்களுக்கு தாதியர் தொழிலை வழங்க உத்தேசித்துள்ளதாக தெரிவித்த அவர், உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டலின் அடிப்படையில் டீநnஉhஅயசம 4 எனும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற நவீன ஆய்வுகூட வசதிகளை மருந்துப் பரிசோதனைக்காக இலங்கையில் ஸ்தாபிக்க எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles