NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனு ஒத்திவைப்பு!

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கோட்டை நீதவான் வழங்கிய அழைப்பாணையை இரத்து செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று ஒத்திவைத்துள்ளது.

இந்த மனுவை விசாரித்த பெஞ்ச் உறுப்பினர்கள் பலர் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றதால் மனுவை விசாரிக்க புதிய பெஞ்ச் ஒன்றை நியமிக்க முடிவு செய்யப்பட்டு திகதி நிர்ணயிக்கப்பட்டது.

இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான தம்மிக்க கணேபொல மற்றும் தமித் தோட்டவத்த முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த திகதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles