யாழ். கொடிகாமத்தில் தியாக தீபம் திலீபனின் எழுச்சி ஊர்திப் பவனி ஆரம்பாகியுள்ளது.
குறித்த ஊர்திப் பவனி தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (24.09.2023) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வடக்கு முழுவதும் இந்த எழுச்சி ஊர்திப் பவனி செல்லவுள்ளது.
ஊர்திப் பவனியானது கொடிகாமத்திலிருந்து ஆரம்பித்து சாவகச்சேரி, பூநகரி, முழங்காவில், மன்னார், வவுனியா ஊடாக பயணித்து கிளிநொச்சியை வந்தடைந்து 26ஆம் திகதி யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை வந்தடையவுள்ளது.







