NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

”ரணிலை வாசியுங்கள்“ பிரச்சார நிகழ்ச்சித் திட்டம் நாளை ஆரம்பம்..!

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில், நாளை (07) காலை 8 மணிக்கு நாடளாவிய ரீதியில் ”ரணிலைப் வாசியுங்கள்“ பிரச்சார நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த முயற்சி 9 மாகாணங்கள், 160 தொகுதிகள், 341 மாகாண நிறுவனங்கள், 4,984 பிரிவுகள், 14,026 களங்கள் மற்றும் 53,896 கிராம தெருக்களில் பரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல், சமூக மற்றும் கலாசார தன்மை பற்றிய நுண்ணறிவுகளை மக்களுக்கு வழங்குவதே இதன் முதன்மையான நோக்கமாகும்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தயாரிப்பில் ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் “புலுவன் ஸ்ரீலங்கா“ (முடியும் ஸ்ரீலங்கா) விஞ்ஞாபனத்தின் முக்கிய கூறுகளை முன்னிலைப்படுத்தும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் மற்றும் பொது விழிப்புணர்வு முயற்சிகளும் இந்த பிரச்சாரத்தில் அடங்கும்.

நீண்ட வரிசையில் நிற்கும் சவால்களில் இருந்து விடுபட்டு, பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு தயாராக உள்ள ஒரு தேசத்தில் ஒளிமயமான எதிர்காலத்தை கட்டியெழுப்ப, மக்களின் அபிலாஷைகளையும் நம்பிக்கைகளையும் சேகரிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த பிரச்சாரத்தில் பங்கேற்க அனைவரையும் அன்புடன் அழைப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

Share:

Related Articles