(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
வட்டகொட மற்றும் தலவாக்கலைக்கு இடையில் புகையிரதம் தடம் புரண்டதால் மலையகப் பாதையில் புகையிரத போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன் துணை நிர்வாகி எம்.ஜே.இடிபோலகே பதுளை நோக்கிச் சென்ற இரவு தபால் புகையிரதம் தடம் புரண்டதாக தெரிவித்தார்.
இதன் காரணமாக மலையக வீதியின் புகையிரத போக்குவரத்து கொட்டகலை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பயணிகளின் வசதிக்காக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, கும்புருகமுவ மற்றும் வெலிகமவுக்கு இடையில் புகையிரத பாதையில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளமையினால் கரையோரப் பாதையில் பயணிக்கும் பல புகையிரதங்கள் தாமதமாகியுள்ளன.