NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வழிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம்..!

சிறுவர் தினத்தை முன்னிட்டு வழிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம்.

வழிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் வருகின்ற 01.10.2024 முதலாம் திகதி கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர்.

தொடர்ச்சியாக எமது போராட்டமானது மாதத்தின் இறுதி நாளாகிய 30 ஆம் திகதி நடைபெற்று வருகின்ற உறவுகளை தேடிய  போராட்டமானது இம்மாதம் அதாவது 30.09.2024 அன்று நடைபெற இருக்கின்ற போராட்டம் 01.10.2024 முதலாம் திகதி சிறுவர் தினமான அன்று எமது கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர் என வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்களின் சங்கத்தின் தலைவி கலாரஞ்சினி தெரிவித்துள்ளார்.

இறுதி யுத்தத்தின்போது பல சிறார்கள் செல்விச்சிக்கலாலும் விமான தாக்குதலும் கொல்லப்பட்டும் பல சிறார்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ள போதும் ஒரு சில சிறார்கள் இராணுவத்தினிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்களுக்கான நீதி இதுவரையும் கிடைக்கப்பெறவில்லை அவற்றை வலியுறுத்தி இச் சிறுவர் தினத்தை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளனர்  

அத்துடன் இவ் போராட்டம் ஆனது  கிளிநொச்சியில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles