NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வவுனியாவில் சுவாமி விவேகானந்தரின் குருபூசை தினம் அனுஷ்டிப்பு!

வவுனியாவில் சுவாமி விவேகானந்தரின் 161வது குருபூசை தினம் இன்று காலை(12) அனுஸ்டிக்கப்பட்டது. 

வவுனியா புகையிரதநிலைய வீதியில் அமைந்துள்ள அவரது சிலை அருகே குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது. 

இதன்போது அன்னாரது சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 

நிகழ்வில் மாணவிகளான நி.ஐஸ்ணவி, பா,பாணுஜா,த.கோபிகா மற்றும் தமிழ் மணி அகளங்கன் ஆகியோர் விவேகனந்தர் தொடர்பான சிறப்புரைகளை நிகழ்த்தினர். 

குறித்த நிகழ்வானது சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தின் அனுசரணையில் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles