(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
வெள்ளவத்தையில் ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
கோட்டையில் இருந்து தெஹிவளையை நோக்கி நேற்று (9) பயணித்த புகையிரதத்தில் மோதுண்டே இந்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது சடலம் அடையாளம் காணப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.