NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிச்சைக்காரன 2; படத்தின் வெற்றிக்கு இதான் காரணமா?

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படம் உருவாகியுள்ளது. விஜய் ஆண்டனி நடித்ததோடு மட்டுமல்லாமல் இயக்கியும் உள்ளார்.
இதில் காவ்யா தப்பார், ராதா ரவி, ஒயி ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் கடந்த 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

பிச்சைக்காரன்-2 திரைப்படம் வெளியான முதல் நாளில் தமிழில் ரூ.3.25(இந்திய பெருமதி) கோடியும் தெலுங்கில் ரூ 4.5 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில், நடிகர் விஜய் ஆண்டனி யாருமே சொல்லாத Cring விஷயங்கள் இருந்ததால் தான் பிச்சைக்காரன் வெற்றி பெற்றது என தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் பேசியதாவது, Cring என்று சொல்லி நாம் பல விஷயங்களை மறக்கிறோம். வாழ்க்கையில் உணர்வுப்பூர்வமான பிணைப்புக்காக தான் நாம் அனைவரும் ஏங்குகிறோம். அதனை பலரும் Cring என கூறிவிடுகிறார்கள்.
Cring விஷயங்கள் இருந்ததால் தான் பிச்சைக்காரன் படம் வெற்றி பெற்றது என்றும் கூறியுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles