NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

குட் பேட் அக்லியின் வெளிநாட்டு உரிமை விற்பனை 22 கோடி.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் துவங்கும் என கூறப்படுகிறது.மேலும் இப்படத்தில் அஜித்துடன் ஸ்ரீலீலா இணையவுள்ளார். மேலும் மீனா மற்றும் சிம்ரன் இருவரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளார் என்கின்றனர்.மே 1 அஜித்தின் பிறந்தநாள் அன்று கண்டிப்பாக குட் பேட் அக்லி படத்திலிருந்து சர்ப்ரைஸ் அப்டேட் வெளியாகும் என கூறப்படுகிறது. குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு கூட இன்னும் துவங்காத நிலையில், அதற்குள் படத்தின் வெளிநாட்டு உரிமை விற்பனை ஆகிவிட்டதாம். அதுவும் ரூ. 22 கோடிக்கு விற்பனை செய்துள்ளதாக பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகவுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமை, படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பே விற்பனை ஆகியுள்ளது. இது அஜித்துக்கு வெளிநாட்டில் கிடைத்துள்ள மிகப்பெரிய மார்க்கெட்டை காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles