NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பிரபல நடிகை

ஹிந்தி படங்கள் மற்றும் சில தொலைக்காட்சி தொடர்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகை அம்ரிதா பாண்டே.

2022ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த சந்திரமணி என்பவரை திருமணம் செய்து கொண்டு, அங்கேயே வசித்து வந்தார்.

இந்நிலையில் அம்ரிதா அவரது தங்கை வீணா பாண்டேயின் திருமணத்துக்கு சென்றுள்ளார்.

திருமணம் முடிந்ததன் பின்னரும் சில நாட்கள் அங்கேயே தங்கியிருந்த அம்ரிதா, தனது திரை வாழ்க்கை குறித்து மிகுந்த கவலையில் இருந்துள்ளார்.

இவ்வாறிருக்கு நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் அம்ரிதா.

மாலை 3.30 மணிக்கு வீட்டுக்கு வந்த வீணா பாண்டே சகோதரியின் நிலையைக் கண்டு அலற, அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடி அருகிலுள்ள மருத்துவமனைக்கு அம்ரிதாவை கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால்,ஏற்கனவே அம்ரிதா இறந்துவிட்டார். இந்த தற்கொலை தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இறப்பதற்கு சில மணித்தியாலங்கள் முன்னர்,

‘இரண்டு படகுகளில் வாழ்க்கை இருக்கிறது. அப்படி ஏன் சவாரி செய்ய வேண்டும். அதனால் படகை மூழ்கடித்து எனது பாதையை எளிதாக்கிக் கொண்டேன்’ என அம்ரிதா ஸ்டே்டஸ் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அம்ரிதாவின் இறப்பு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Share:

Related Articles