NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்

பாெலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

இதனைத் தொடர்ந்து சல்மான் கானுக்கு பாதுகாப்பு பலத்தப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா கொலையில் குற்றம்சாட்டப்பட்ட லாரன்ஸ் பிஷ்னோய் குழுவில் ஒருவரான கோல்டி ப்ரார் தற்போது நடிகர் சல்மான் கானுக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

தனியார் ஊடக நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள கோல்டி ப்ரார், “நாங்கள் அவரைக் கொல்வோம். நிச்சயமாக கொல்வோம்.

லாரன்ஸ் பாய் தான் விரும்பினால் மட்டுமே கருணை காட்டுவார். நாங்கள் முன்பே கூறியதுபோல் சல்மான் கான் மட்டுமல்ல, நாங்கள் உயிருடன் இருக்கும்வரை எங்கள் எதிரிகள் அனைவருக்கும் எதிராக எங்கள் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்வோம்.

சல்மான்கான் தான் எங்கள் இலக்கு. அதில் சந்தேகமே இல்லை. நாங்கள் தொடர்ந்து முயற்சிக்கிறோம். நாங்கள் அதில் வெற்றியடையும்போது உங்களுக்கு தெரியும்” என்று கூறியுள்ளார்.

Share:

Related Articles