NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாகிஸ்தானில் இருந்து கொலை மிரட்டல் – சமீர் வான்கடேவின் மனைவி போலீசில் புகார்

மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியாக செயல்பட்டவர் சமீர் வான்கடே. கடந்த 2021ம் ஆண்டு October 3 மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை விருந்து நடைபெறுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் கப்பலில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் Bollywood நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் ஷாருக்கானிடம் பணம் பறிக்க சமீர் வான்கடே முயற்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், தனக்கு பாகிஸ்தானில் இருந்து கொலை மிரட்டல் வருவதாக சமீர் வான்கடேவின் மனைவி கிராந்தி ரெட்கர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

மிரட்டல் வந்துள்ள எண்கள் குறித்த விவரத்தையும் கிராந்தி தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Share:

Related Articles