NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கையில் திருப்பதி ஏழுமலையான் கோவில்

இலங்கையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைக்கப்பட்டு, விரைவில் மஹாகும்பாபிஷேக விழாவுடன் திறக்கப்பட உள்ளது.

அதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளுக்காக இந்தியாவின் திருமலை திருப்பதி தேவஸ்தான பிரமுகர்கள் உள்ளடங்கலான பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்கள்.

இந்தியாவின் திருமலை திருப்பதி தேவஸ்தான பிரமுகர்கள் உள்ளடங்கலான குழுவினர் நேற்றைய தினம் சிலாபம் – முன்னேஸ்வரம் ஆலயத்திற்குரிய இடத்தை சென்று பார்வையிட்டார்கள்.

விரைவில் ஆலயத்திற்கு உரிய பூமி பூஜை இடுவதற்கு திருவருள் கூடும் என தமிழ்நாடு சிவசேனா அமைப்பு தலைவர் திரு. K. சசிகுமார் தெரிவித்துள்ளர்.

Share:

Related Articles

Manjummal Boys May 3 OTTயில்