NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

களுத்துறையில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…!

களுத்துறை மாவட்டத்தில் தொழுநோயாளிகளின்  அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக களுத்துறை சிரேஷ்ட சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி சுகாதார வைத்திய அதிகாரியின் பல அலுவலகங்களில் தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாணந்துறை, வாதுவ, ஹொரண உள்ளிட்ட பல சுகாதார வைத்திய அலுவலகங்களில் நோயாளர்கள் பதிவாகி வருவதாகவும் கூறப்படுகின்றதுடன், தோலில் உணர முடியாத புள்ளிகள் தென்பட்டால், விரைவில் அரச வைத்தியசாலைக்கு செல்லுமாறும், இதன் மூலம் தொழுநோயை உடனடியாக குணப்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளனர்.

Share:

Related Articles