NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முட்டைக்கு விதிக்கப்பட்டிருந்த நிர்ணய விலை நேற்று நள்ளிரவுடன் நீக்கம் – நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவிப்பு…!

முட்டைக்கு விதிக்கப்பட்டிருந்த நிர்ணய விலை நேற்று நள்ளிரவு முதல் நீக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் உள்ளூர் சந்தைக்கு வெளியிடப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ நேற்று தெரிவித்திருந்தார்.

இதன்படி, சதொச விற்பனை நிலையங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் நேற்று முதல் 35 ரூபாவுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதி செய்யப்பட்ட முட்டைகள் 40 ரூபாய் வீதம் விற்பனை செய்யப்படும் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles