NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

குருந்தூர்மலையில் சைவ வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டமை தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு…!

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் கடந்த 14 ஆம் திகதி சைவ வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டமை மற்றும், ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடானது முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட தரப்பினரால் வவுனியாவில் அமைந்துள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்தியக் காரியாலயத்தில் மேற்கொள்ளப்பட்டது.

குருந்தூர்மலையில் கடந்த 14 ஆம் திகதி, பிரதோச தினத்தில் சைவத் தமிழ் மக்கள் சிலர் விசேட பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ளச் சென்ற போது பெரும்பாண்மை இனத்தவர்களாலும், பௌத்த துறவிகளாலும் குழப்பம் விளைவிக்கப்பட்டதுடன், பொங்கலுக்காக அங்கு தீ மூட்டப்பட்ட போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவராலும், பெரும்பாண்மை இனத்தவர் ஒருவராலும் சப்பாத்துக்கால்களால் மிதிக்கப்பட்டு அணைக்கப்பட்டது.

அத்தோடு வழிபாடுகளை மேற்காள்ள வருகை தந்த சைவத் தமிழ் மக்களும், மக்கள் பிரதிநிதிகள் சிலரும், சமூக செயற்பாட்டாளர்களும் பொலசஸாரால் தாக்கப்பட்டுமிருந்தனர்.

இந்நிலையில், குறித்த இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அங்கு சைவ வழிபாட்டு உரிமையினைத் தடுக்கும் வகையில் செயற்பட்ட பௌத்த தேரர்களுக்கும், பெரும்பாண்மை இனத்தவர்களுக்கும் ஆதரவாகச் செயற்பட்டிருந்ததுடன், சைவ வழிபாட்டுரிமைகளைத் தடுக்கின்ற செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Share:

Related Articles