கிரேண்ட்பாஸ் – ஒருகொடவத்தை பகுதியில் மகனால் தந்தை படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றிரவு (18) இடம்பெற்றுள்ளதாகவும் கொலை செய்யப்பட்டவர், 54 வயதுடைய அவிசாவளை பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவருக்கும் அவரது மகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, மகன் இரும்புக் கம்பியால் தந்தையின் தலையில் தாக்கியுள்ளார்.
இதனால் பலத்த காயமடைந்த தந்தை, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த தந்தையின் உடல் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 20 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கிரேண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.