NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வாக்காளர் அட்டைகள் இதுவரை கிடைக்கப்பெறாதவர்கள் இன்று முதல் பெற்றுக்கொள்ள முடியும்!

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை இதுவரை கிடைக்கப்பெறாதவர்கள் இன்று முதல் தமக்குரிய பிரதேசத்தின் தபால் அலுவலகங்களில் அவற்றை பெற்றுக்கொள்ள முடியுமென உப தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி தேர்தலுக்கென இதுவரை 97 வீதமான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 3 ஆம் திகதி வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பிக்கப்பட்டதுடன் கடந்த 14 ஆம் திகதி வரை குறித்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாக உப தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். 

Share:

Related Articles