NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வேட்பாளர்களின் விருப்ப எண்கள் அடுத்த வார ஆரம்பத்தில் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு..!

பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களின் விருப்ப எண்கள் அடுத்த வார தொடக்கத்தில் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வேட்புமனுக்களின் படி தற்போது அவை அகர வரிசைப்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாராளுமன்றத் தேர்தலில் 22 மாவட்டங்களுக்கு 690 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் போட்டியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, 74 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணும் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles