மக்களால் ஸ்தாபிக்கப்பட்ட அரசாங்கத்தின் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அதனை வீழ்த்த முடியாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அரலகங்வில பகுதியில் இடம்பெற்ற கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், இந்த நாட்களில் தற்போதைய அரசியல் கொள்கை பிரகடனம் மற்றும் அரசியல் கலாசாரத்துடன் எதிர்க்கட்சியினருக்கு மோதிக்கொள்ள முடியாத சூழல் காணப்படுகிறது.
உண்மையில் அவர்களால் அதனை நினைத்துக்கூட பார்க்க முடியாது. இதன் காரணமாகவே அவர்கள் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். இவ்வாறான செயற்பாடுகளால் அரசாங்கத்தை வீழ்த்த முடியாது. இந்த அரசாங்கம் மக்களால் ஸ்தாபிக்கப்பட்டது. அதனை அவர்களே பாதுகாக்கின்றனர்.
இன்னும் இவர்களால் மக்களின் இருப்பிடங்களுக்குச் சென்று நேரடியாக கலந்துரையாட முடியாமல் உள்ளது. இவ்வாறான கோழைகளுக்கு அரசாங்கத்தை வீழ்த்துவது என்பது வெறும் கனவு மாத்திரமேயாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.