NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அவிசாவளையில் 12 இளைஞர்கள் கைது!

அவிசாவளை – குருகல்ல பகுதியிலுள்ள 12 இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 12 இளைஞர்கள் விடுதி ஒன்றில் போதைப்பொருட்களுடன் இருந்ததாகவும் , அந்த சந்தர்ப்பத்திலேயே கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடுதியின் உரிமையாளர் பேஸ்புக் ஊடாக இந்த ஒன்றுகூடலை ஏற்பாடு செய்திருந்தமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களிடம் இருந்து கஞ்சா போதைப் பொருள், விடுதி உரிமையாளரிடம் இருந்து ஹஷிஸ் போதைப்பொருள் மற்றும் 22 மதுபான போத்தல்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles