NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல் !

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்பட்டதிலிருந்து இதுவரையான 13 வருடங்களில் 99ஆயிரத்து 375 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 5292 விபத்துகள் வாகன சாரதிகளின் கவனயீனத்தால் ஏற்பட்டதாக நெடுஞ்சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.

குறித்த விபத்துகளில் 66 பேர் உயிரிழந்துள்ளதுடன்
637 பேர் நிரந்தர உடல்நலப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாகவும் நெடுஞ்சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.

எனவே, அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனம் செலுத்தும் போது அவதானமாக செயற்பட வேண்டும் என நெடுஞ்சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் குழு வாகன சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles