NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான 3 குற்றச்சாட்டுக்கள் தள்ளுபடி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

அவுஸ்திரேலியா – சிட்னியில் இளம் பெண்ணை பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 4 குற்றச்சாட்டுகளில் 3 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த வழக்கு இன்று (18) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ஒரு குற்றச்சாட்டு தொடரப்படும் என அரசாங்க சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 2ஆம் திகதி இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டியின் போது இந்த துஷ்பிரயோகம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தனுஷ்க குணதிலக்க நவம்பர் 6ஆம் திகதி நியூ சவுத் வேல்ஸ் மாநில பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து, குறித்த வழக்கு விசாரணை ஜூலை 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles