NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ரஃபாவில் அவதியுற்றுவரும் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்!

காசா பகுதியின் தெற்கு முனையில் உள்ள ரஃபா நகருக்கு அருகில் உள்ள அகதிகள் முகாமில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் அவதியுற்று வருவதாகவும் அவர்கள் அனைவருக்கும் பொதுவாக ஒரே ஒரு கழிவறை மாத்திரமே காணப்படுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலிய தாக்குதல்களினால் இருப்பிடங்களை இழந்து ரஃபா நகரில் குவிந்த பலஸ்தீன குடிமக்களுக்காக முன்வந்துள்ள ‘Oxfam’ அமைப்பு வழங்கிய தகவல்களின்படி, சர்வதேச ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.

‘Oxfam’ என்பது ஒரு அரசு சாரா சர்வதேச அமைப்பாகும்.

இது வறுமையை ஒழிக்கவும் சமத்துவத்தை உருவாக்கவும் பாடுபட்டு வருகிறது.

காசா இஸ்ரேலுக்கு மட்டுமல்ல, எகிப்துக்கும் எல்லையாக காணப்படுகிறது.

ரஃபா என்பது எகிப்தின் எல்லைக்கு அருகில் உள்ள காசா நகரம் ஆகும்.

இஸ்ரேலியப் படைகள் காசா பகுதியின் ஹமாஸ் போராளிகளை குறி வைத்து காசாவின் வடக்குப் பகுதிகளிலிருந்து தாக்குதல் நடத்தினர்.

காசாவைச் சேர்ந்த அனைவரும் தங்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக ரஃபா நகருக்கு வந்து நகரைச் சுற்றியுள்ள அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், தற்போது மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஃபா நகரின் மீது இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles