NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்தியாவில் கடத்தப்பட்ட இலங்கை தொழிலதிபர்!

இலங்கை வர்த்தகர் ஒருவர் சென்னைக்கு வியாபாரத்திற்காக சென்ற போது அவரைக் கடத்திச் சென்ற பெண் ஒருவர் உட்பட நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தனது தந்தையை கடத்திய சிலர் அவரை விடுவிப்பதற்காக 15 இலட்சம் இந்திய ரூபாவை கோரி அழைப்பொன்றை மேற்கொண்டதாக கடத்தப்பட்டதாகக் கூறப்படும் நபரின் மகள் என தன்னை அடையாளப்படுத்திய பெண் ஒருவர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

அதன்படி, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய கடத்தப்பட்ட வர்த்தகர் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles