NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கையின் அபிவிருத்திக்கு அடுத்த இலக்கு தென்னிந்திய நடிகர் ரஜினி காந்த்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் புகழ்பெற்ற தென்னிந்திய நடிகரான ரஜினிகாந்தின் உதவியை இலங்கை நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் டி.வெங்கடேஷ்வரனுக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கும் இடையில் இந்த வாரம் அவரது இல்லத்தில் வைத்து சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, துணை உயர்ஸ்தானிகர் ரஜினிகாந்தை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

அதன்படி அவருடைய வருகை இலங்கையின் சினிமா, சுற்றுலாத்துறைகளை மேம்படுத்தும் என்று இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் வெங்டேஸ்வரன் தெரிவித்துள்;ளார்.

Share:

Related Articles