NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாளை 14 மணி நேர நீர்வெட்டு…!

கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை (27) முதல்  14 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதன்படி நாளை சனிக்கிழமை  மாலை 5 மணி முதல்  ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி வரை குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

கொழும்பு 5 மற்றும் கொழும்பு 6, தெஹிவளை, கல்கிசை மற்றும் மொரட்டுவ நகர சபை பகுதிகளிலும், ஜயந்திபுர மற்றும் பெலவத்தை பிரதேசங்களிலும் இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.

Share:

Related Articles