நாட்டில் பல பிரதேச செயலக பிரிவுகளிலுள்ள மதுபானசாலைகளை 7 நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேசிய பொசன் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் ஜூன் மாதம் 18ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை மதுபானசாலைங்கள் மூடப்படவுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மத்திய நுவரகம், கிழக்கு நுவரகம் மற்றும் மிஹிந்தலை பிரிவு 03 ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் அக்காலப்பகுதியில் மூடப்படவுள்ளன.